இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

207 0

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரை  நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை (27) ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.

நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மூன்று படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் இம்மாதம் 14 ஆம் திகதி கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது,  இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது, 12 மீனவர்களின் விளக்கமறியலையும் நவம்பர் 8 ஆம் திகதி வரை நீடிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.