ஜேர்மனியின் கடற்பரப்பில் இரண்டு கப்பல்கள் மோதி விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

274 0

ஜேர்மனியின் கடற்பரப்பில் இரண்டுசரக்குகப்பல்கள் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன.

ஜேர்மனியின் வடக்குகிழக்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டன் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த வெரிட்டி என்ற கப்பல்பஹாமாவை சேர்ந்த பொலைசி என்ற கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெரிட்டி கப்பல் மூழ்கியுள்ளது அதன் ஏழு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என ஜேர்மன் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆறுபேர் காணாமல்போயுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.