இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

299 0
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் 2 படகினில் ஊடுருவிய இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்திய தமிழகம் இராமேஸ்வரம் பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள் 12பேர் நேற்று தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலிற்குப் புறப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு மீன் பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களுமே இரு படகுகளுடன் கைது செய்யப்பட்டு காங்காசேன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் முன் ஆயர் செய்யப்படவுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஏற்கனவே யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 18 இந்திய மீனவர்களும் வவுனியா சாறைச்சாலையில் 8 இந்திய மீனவர்களுமாக மொத்தம் 26 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.