ஹப்புத்தளை – வெலியத்தென்ன பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு ஒன்றின் காரணத்தினால் குறித்த துப்பாக்கி சூட்டு இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
காயமடைந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபரின் மனைவியுடன் தகாத தொடர்பு வைத்துள்ளமையே இதற்கு காரணம் என அறியவந்துள்ளது.