அண்மைய சில நாட்களாக பேசப்பட்ட அமைச்சரவை மாற்றத்தை இந்த ஆண்டிற்குள் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் அரசாங்கத்திற்குள் நெருக்கடி நிலமை உருவாகலாம் என்று சிரேஷ்ட அமைச்சர்கள் கருத்து வௌியிட்டுள்ளனர்.
அதேநேரம் சில அமைச்சர்கள் தற்போது பதவி வகிக்கின்ற அமைச்சுக்களில் இருந்து விலகுவதற்கு விருப்பம் இன்மை காரணமாக இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பான யோசனை கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப் போவதாக வௌியான செய்திகளையடுத்து, சில அமைச்சர்கள் தற்போதிருக்கும் அமைச்சுக்களுக்கு மேலதிகமான சில அமைச்சுக்களையும் கேட்டுள்ளனர்.
இந்த நிலமை காரணமாக குறித்த அமைச்சரவை மாற்றம் இந்த ஆண்டிற்குள் இடம்பெற மாட்டாது என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன