விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

361 0

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவரின் உடல் நலம் பாதிப்படைந்ததாக சிறைச்சாலைகள் திணைக்கள தரப்புகள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகள் சட்டமூலத்திற்கு அமைவாக எந்தவொரு சிறைக்கைதியாவது உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்தால் அவரை பலவந்தமாக மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளது.

இந்தநிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொள்வது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமே அன்றி நீதிமன்றத்திற்கு எதிரான போராட்டம் அல்லவென தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.