யாழ். போதனா வைத்தியசாலை பணியாளர்கள் படுகொலையின் 36 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு

164 0

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவுதினம் இன்று சனிக்கிழமை (21) குறித்த வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் பலரும் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 36வது நினைவுதினமான இன்றைய நினைவேந்தலில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின்  உறவினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுச் சுடரும் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.