நாட்டை ஆட்சி செய்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் சில நிறுவனங்களை மாத்திரம் பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“புரட்சிக்கு வழி” என்ற தொனிப்பொருளில் காலி ஹபராதுவ நகரில் நேற்று (25) மாலை ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தநிலையில், ஐக்கிய தேசிய கட்சியினால், சிறிலங்கா சுதந்திர கட்சி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.