பொலிஸால்  படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு

131 0

யாழ்ப்பாணம், ஒக்ரோபர் 21 இலங்கை பொலிஸாரால் மிலேச்சத்தனமாக கடந்த 2016 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான கஜன் சுலக்சன் ஆகியோரது 7ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கபட்டது.

இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் மாணவர்களது நினைவருருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில்குமாரினால் நினைவுபேருரையும் ஆற்றபட்டது. இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார்,கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில்குமார் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.