காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 33ஆவது நாளாக..(காணொளி)

329 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 33ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 33ஆவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இவர்களின் போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது.