எம்பிலிப்பிடிய – பனாமுரே பிரதேசத்தில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையொன்றுடன் சந்தேகநபரொருவர் நேற்று இரவு கலால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நீண்ட காலமாக இந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை, 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடன் வைத்திருந்த பெண்ணொருவர் ரத்மலானை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.