சில வாரங்களில் ஜனாதிபதி முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்கலாம்!

259 0

எதிர்வரும் சில வாரங்களில் ஜனாதிபதி அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ள, எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

ஜனாதிபதி இரண்டு வருடங்கள் ஜனநாயகத்துடன் தனது ஆட்சியை கொண்டு சென்றதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் எதிர்வரும் 4 வருடங்களில் முன்னோக்கி செல்ல இது போன்ற தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இதனால் சிலர் சந்தோஷப்படலாம் எனவும் சிலர் மனது புண்படலாம் எனவும் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.