ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மகிந்த ராஜபக்ஷ இன்று முன்னிலை

226 0

பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ இன்று முன்னிலையாகவுள்ளார்.

விளம்பரம் ஒன்றுக்காக தொலைக்காட்சி கூட்டுதாபனம் ஒன்றுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பான விசாரணைகள் குறித்தே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

முன்னதாக குறித்த ஆணைக்குழுவிற்கு கடந்த 16 ஆம் திகதி அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.