யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு வகுப்பு தடை

254 0
யாழ். பல்கலைக் கழகத்தில் பகிடி வதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட 6 மாணவர்களிற்கு தற்காலிகமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல் கலைக் கழக நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது பகிடிவரையில் ஈடுபட்டதாக புதுமுக மாணவர்களால் இனம் காட்டப்பட்ட மாணவர்கள் 6 பேருக்கே  இவ்வாறு வகுப்புக்களிற்கு  இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களில் 3 கலைப்பிரிவு மாணவர்கள் சட்டத்துறையின் புகுமுக மாணவர்கள் மீது பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று மேலும் 3 விஞ்ஞான பீட மாணவர்கள் அதே பீடத்தினைச் சேர்ந்த புதுமுக மாணவர்கள் மீது பகிடி வதை புரிந்த்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதனையடுத்து அந்த மூன்று மாணவர்களிற்கும் தற்காலிக வகுப்புத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தற்காலி தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டவர்களிற்கு எதிராக ஓர் விசாரணை இடம்பெற்று அந்த விசாரணையில் இவர்கள் தவறு இழைத்தமை நிரூபிக்கப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். அவ்வாறு எண்பிக்கப்படாத பட்சத்தில் தடை இரத்துச் செய்வதே வழமையானது எனத் தெரிவிக்கப்பட்டது.