இலங்கை-ரஷ்யாவுக்கிடையேயான உறவுகளை தொடர்ந்தும் சிறந்த வகையில் முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கை

271 0

ரஷ்ய – இலங்கை உறவுகளை வலுப்படுத்தி முன்னோக்கி செல்வதற்கு இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அந்த நாட்டின் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தம் தொடர்பான துறைகளை சக்திப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையேயான உறவுகளை தொடர்ந்தும் சிறந்த வகையில் முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.