புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் சகல பிரச்சினைகளும் தீராது : சம்பிக்க ரணவக்க

322 0

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாத்திரம் நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காது என மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் குறிப்பு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் நாட்டு தேவை என்பது உண்மை. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாத்திரம் நாட்டின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.

எனினும் அரசியலமைப்புச் சட்டம் மூலமாக தீர்த்து கொள்ளக் கூடிய பிரச்சினைகள் இருக்கின்றன என்பது மட்டும் உண்மை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.