சிரிய இராணுவத்தின் பயிற்சிக்கல்லூரி மீது தொடர் ஆளில்லா விமானதாக்குதல் – 60 பேர் பலி

183 0
image
சிரிய இராணுவத்தின் பயிற்சிக்கல்லூரி மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆளில்லா விமானதாக்குதலில் 60 இராணுவத்தினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

கடேட்களின் குடும்பத்தினர் கலந்துகொண்ட பட்டமளிப்பு நிகழ்வை இலக்குவைத்து ஹோம்சில் உள்ள இராணுவபயிற்சிக்கல்லூரி பல ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத அமைப்பே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள சிரிய இராணுவம் அமைப்பின் பெயரை குறிப்பிடவில்லை.

ஜிகாத்தீவிரவாதிகளும் கிளர்ச்சிக்காரர்களும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள பகுதியிலிருந்தே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.