பதவி வேண்டாம் – தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு கடிதம்

323 0

201607221130267221_DMDK-District-secretaries-letter-to-Vijayakanth_SECVPFதே.மு.தி.க.வில் மேலும் சில மாவட்ட செயலாளர்கள் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கக்கோரி விஜயகாந்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர்.சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு தே.மு.தி.க.வில் இருந்து பல மாவட்ட செயலாளர்கள் விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்தனர்.மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருந்தவர்கள் அடுத்தடுதது விலகினர்.கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட ஒருசில நிர்வாகிகளையும் கட்சி தலைவர் விஜயகாந்த் நீக்கினார். ஒரு சில மாவட்ட செயலாளர்கள் உடல்நலம் கருதி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தங்களை விடுவிக்க கோரியதால் அதனை ஏற்று அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் அய்யப்பெருமாள் உடல்நலம் கருதியும், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் மணிகண்டன் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இவர்களை தொடர்ந்து மேலும் சில மாவட்ட செயலாளர்கள் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கக்கோரி விஜயகாந்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கடிதம் கொடுத்துள்ளனர்.தங்களின் ரசிகர்களாக 25 ஆண்டுகளாக இருந்து பின்னர் கட்சியில் சேர்ந்து தங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம்.குடும்ப சூழ்நிலை காரணமாக நாங்கள் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்க கேட்கிறோம்.பொறுப்பில் இருந்து விடுவித்தாலும் கட்சியில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்று விஜயகாந்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரி கடிதங்கள் குவிகின்றன. ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில இருப்பவர்களும் கடிதம் அனுப்புவதால் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார்.