50 பயனாளிகளுக்கு நிலக்கடலை வழங்கி வைப்பு

210 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு  புதன்கிழமை (04) கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து நிலக்கடலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு ஒரு ஏக்கர் பயிர்செய்கைக்கான தலா 50 கிலோ கிராம் விதை நிலக்கடலை உள்ளீடுகளும் அத்துடன் ஆரம்ப கட்ட நிலபண்படுத்தலுக்காக சிறு தொகை கொடுப்பனவும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதி பங்களிப்பில் கொக்குதொடுவாய் கமநல சேவை நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், உத்தியோகத்தர்கள் என பலர் பயனாளிகளுக்கு நிலக்கடலை வழங்கி வைத்தனர்.