அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரிப்பு

234 0

கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 42 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறிய அவர்,தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற நோயாளிகளின் ஆர்வம் குறைந்து வருவதே இந்த உயர்வுக்குக் காரணம் என்றும்  சுகாதார அமைச்சர் கூறினார்.