வவுனியாவில் 28 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

229 0

வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே  இன்று (23) 28 ஆவது நாளாக தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்கள் கடந்து செல்லும் நிலையிலும், தமது போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லையென்றும், எப்போது தீர்வு கிடைக்கும் என்றும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.