சர்வதேச சமுகம் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டுமாம் : மஹிந்த

291 0

சர்வதேச சமுகம் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா பாராளுமன்ற வாளாகத்தில் நேற்று (22) இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனது எண்ணம் அனைத்தும் பிரித்தானிய மக்களை பற்றியே உள்ளது. இலங்கை மக்களுக்கு தீவிரவாதம் தொடர்பில் நன்றாக அறிந்தவர்கள். தீவிரவாதத்துக்கு எல்லையென்பது கிடையாது. ஆகிவே சர்வதேச கமுகம் தீவிரவாதத்தை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.