நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும்

125 0

கிளிநொச்சியில் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க கோரி தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரீ.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க கோரி இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.