தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை தீக்கிரையாகி பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்!

240 0

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) காலை ஏற்பட்ட தீ பரவலால் வைத்தியசாலை உபகரணங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் பல தரப்பட்ட மருந்துப் பொருட்கள், ஆய்வுகூட உபகரணங்கள், பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் தீயில் கருகி சாம்பலாகின.

திருகோணமலை தீ அணைக்கும் பிரிவு மற்றும் முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்டோர் சென்று தீ விபத்து தொடர்பில் ஆராய்ந்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.