திருமாவளவனிடம் தலைவர்கள் நேரில் நலம் விசாரிப்பு

109 0

சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக கடந்த25-ம் தேதி விசிக தலைவர்திருமாவளவன் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்கள் அறிவுரையின்படி, மருத்துவமனையில் அவர் ஓய்வில் இருந்து வருகிறார். அவரை தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று அமைச்சர் சி.வி.கணேசன், மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ உள்ளிட்டோர் நேரில்சென்று நலம் விசாரித்தனர். அவர் இன்று வீடு திரும்பவாய்ப்பிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.