கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் ஏப்ரல் 6 முதல் வழமைக்குத் திரும்பும்

324 0

திருத்தப்பணிகள் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் வழமைக்குத் திரும்புமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை பொறியியலாளர் ஒருவர் இதனை தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடுபாதைகள் திருத்தப்பட்டு வருகின்றன.

இதற்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கமைய எதிர்வரும் 5ஆம் திகதி ஓடுபாதைகளை திருத்தியமைக்கும் பணிகள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.