ராகல வர்த்தகரின் மரணத்தில் சந்தேகம்

239 0

மஹியங்கனை – லொக்கல் ஓயா ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணம், சந்தேகத்திற்குரியது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

3 நாட்களாக காணாமல் போயிருந்த நுவரெலிய – ராகல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான வர்த்தகரின் சடலம் குறித்த ஆற்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி வர்த்தக நடவடிக்கைகாக அவர் வீட்டில் இருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பின்னர் மஹியங்கனை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று அவரின் சடலம் லொக்கல் ஓயா ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தற்போது அவரின் சடலம் பதுளை மருத்துவனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரின் சகோதரி எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையின் பின்னரே உறுதியான தகவலை வெளியிட முடியும் என காவற்துறை தெரிவித்துள்ளது.