இலங்கை அணி மீது தாக்குதல் மேற்கொண்டவர் அமெரிக்க தாக்குதலில் பலி

265 0

2009ஆம் பாக்கிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பிரதான உறுப்பினரான பாரி யசீன் அமெரிக்காவில் ஆளில்லாத வாநூர்தி தாக்குதலில் பலியானார்.

ஆப்கானிஸ்தான் பக்ட்டிக்கா மானிலத்தில் உள்ள பர்முல் பிராந்தியத்தில் நேற்று மாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் பாரி யசீன் மற்றும் அவரது சகாக்கள் மூவரும் பலியானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல தீவிரவாத குழுக்களுடன் தொடர்பை கொண்டுள்ள பாரி யசீன், லாகூர் தாக்குதல் மற்றும் ராவல்பிண்டி நகரத்தில் பாக்கிஸ்தானிய இராணுவ தலைமையகம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷ்ராவ் மீதான தாக்குதலுடனும் தொடர்பு கொண்டவர் என நம்பப்படுகின்றது.