விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு

262 0

அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் எதிர்வரும் ஏப்பரல் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குத்தகை அடிப்படையில் அரச பொறியிலாளர் சங்கத்தினருக்கு பெற்றுகொள்ளப்பட்ட 40 வாகனங்களை குடும்பத்தினருக்கும் கட்;சியின் உறுப்பினர்களின் பாவனைக்கு வழங்கியிருந்தார்.

இதன்மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 9 கோடி ரூபா நட்டம் ஏற்றட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.