இலங்கைக்கு முதலீட்டாளர்களை கவர அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் கருத்தரங்குகள்

255 0

இலங்கைக்கு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கருத்தரங்குகள் நடைப்பெறுகின்றன.

இதற்கமைய அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று கருத்தரங்கு ஒன்று நடைப்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து எதிர்வரும்; 23ஆம் திகதி மெல்போனிலும் கருத்தரங்கு நடைப்பெறவுள்ளது.

இதேவேளை, நியூசிலாந்தின் ஒக்லென்ட் நகரிலும் எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கையின் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான கருத்தரங்கு நடைப்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இலங்கையில் முதலீடு’ என்ற தொனிப்பொருளில் இந்த இரு நாடுகளிலும்; தொடர்ச்சியான கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.

இதற்கமைய இந்த இரு நாடுகளிலும் வாழும் அதிகளவிலான இலங்கை வம்சாவழியினர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரலாம் என இலங்கை நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.