அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மிகவும் பலம்பொருந்திய பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும், அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதாகவும் வெளியான தகவல்களில் எவ்வித உண்மைகளும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் மட்டுமே தாம் பங்குபற்றியதாகத் தெரிவித்துள்ள அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றமையானது அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக அர்த்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

