புளத்சிங்கள – இஹல நாரங்கல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் மிதந்தவாறு இருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலையில், இவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை புளத்சிங்கள காவற்துறை முன்னெடுத்துள்ளது.