“அறிவார்ந்த மற்றும் அன்பான மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதற்கு” ‘புத்தக தான’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ‘புத்தக தானம்’ வாசித்து முடிக்கப்பட்ட புத்தகங்கள் அல்லது புதிய புத்தகங்களை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளுக்கு கொடுத்து அவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு சிறு உதவி செய்யும் விதமாக முன்னெடுக்கப்படும் திட்டமாகிறது.
இதனூடாக சேகரிக்கப்படும் புத்தகங்கள் பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் பொருளாதார வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு சென்றடையும்.
அவ்வாறு உங்கள் புத்தகங்களும் வறிய மாணவர்களின் கைகளை அடைய வேண்டும் என விரும்புபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை உங்கள் புத்தகங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தின் சமூக சேவை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம்.
கனவுப் படை இளைஞர் அமைப்பு, சமூக சேவைகள் திணைக்களம், இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இத்திட்டத்தை ஒருங்கிணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


