பாலைதீவு அந்தோனியார் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

228 0
கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு பங்கு பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவின் திருநாள் திருப்பலி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருநாள் திருப்பலியில் யாழ்ப்பாணம், மன்னார் உட்பட பல பிரதேசங்களில் இருந்து  9 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெருமளவான மக்கள் படகுகள் மூலம் வந்து கலந்து கொண்டிருந்தனர்.
திருப்பலியினை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் நடைபெற்றது.
பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்றைய தினம்  நடைபெற்ற திருநாள் திருப்பலியுடன் நிறைவடைந்தது.