போர்க்குற்ற விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும்

211 0
போர்க்குற்ற விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பான கருத்தை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட சுயாதீன நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை பாதுகாப்பு தரப்பினரும், விடுதலைப்புலிகளும் புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம்.
போர் குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பரிந்துரைத்த யோசனைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்தநிலையில், இலங்கையின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.