றக்பி வீரர் கொலை – அதிரடிப் படைவீரர்களிடமும் வாக்கு மூலம்

320 0

waseemறக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் சிறப்பு அதிரடிப்படையினரிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டதாக குற்ற புலனாய்வு துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்

கொழும்பு மேலதிக நீதிவானிடம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, யோசித்த ராஜபக்ச ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கிய சிறப்பு அதிரடிப்படையினரிடமே இந்த வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை, கொலையுண்டு தாஜூதீன் தொடர்புடைய காணொளி மற்றும் சீசீடிவி காட்சிகள் உறுதிப்படுத்தலுக்காக கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள போதும். அவை தொடர்பில் தரவுகளை பெற்றுக்கொள்ள வீசா அனுமதி கிடைக்காமை காரணமாக அலுவலர்களை அனுப்பமுடியாமல் உள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவினர் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.