தையிட்டியில் மண்பறிப்பு-டக்ளஸ் ஆதரவு.

159 0

நாளை மறுதினம் செவ்வாக்கிழமை தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து அதனை கையகப்படுத்தும் அளவீட்டு நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் கச்சேரியிலுள்ள தனது கையாளாகிய காணி விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரியைப் பயன்படுத்தி முறைகேடான முறையில் அளவீட்டு நடவடிக்கையை மேற்கொள்வதற்க முயற்சிப்பதாக அறிய முடிகின்றது.

நேற்று முன்தினம் குறித்த நபர் இரகசியமான முறையில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்குச் சென்று அங்குள்ள பிக்குவைச் சந்தித்து கலந்துரையாடி வந்துள்ளார்.
குறித்த அதிகாரி என்ன காரணத்திற்காக அங்கு சென்றார். காணி உரிமையாளர்கள் இல்லாமல் அவர் சென்ற நோக்கம் என்ன என்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.