கொழும்பில் தூய பால் வழங்கும் திட்டம்

139 0

கொழும்பு நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு தூய பால் வழங்கும் திட்டத்தை இன்று திங்கட்கிழமை (11)  முதல்  தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை (NLDB) ஆரம்பித்துள்ளது.

நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் வளாகத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்ப நிகழ்வை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.