முக்கிய அமைச்சரவை பத்திரத்தில் சுகாதார அமைச்சர் இன்று கைச்சாத்து

432 0

ஒரு சிகரட் வீதம் விற்பனை செய்வதை தடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் இன்று கைச்சாதிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மல்வானை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புகைப் பொருட்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
புகைப்பிடித்தலினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வருடம் ஒன்றிட்காக அரசாங்கம் செலவிடும் தொகையைக் கொண்டு இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களையும் அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.