உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி மீண்டும் வலியுறுத்தல்

239 0

உள்ளுராட்சி சபை தேர்தலை உடன் நடத்துமாறு ஒன்றிணைந்த எதிர் கட்சியான மஹிந்த அணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு தொடர்ந்தும் காலதாமதமானால் பொறுப்பான அமைச்சர் மற்றும் தேர்தல் ஆணையாளரின் வீட்டையும் முற்றுகையிடவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சி எச்சரித்துள்ளது.

ஓன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி சபை தேர்தல் மே 15ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இதற்கு எதிராக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.