இரத்மலானையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்

130 0

இரத்மலானையில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகிலேயே குறித்து துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 46 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.