ஹெரோயின், வாள்களுடன் நடமாடியவர் கைது – யாழில் சம்பவம்

61 0

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (07)  மாலை அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் கூறினர்.