நாட்டின் கல்வி முறையே சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவதற்கு காரணம் – வியாழேந்திரன்

241 0

சிறுபான்மை மக்கள் ஒடுக்கபடுவதற்கு நாட்டின் கல்வி முறைதான் காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குற்றம் சுமத்தினார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தர்.

பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இலங்கையில் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவதற்கு இந்த நாட்டில் அமுலாக்கப்பட்டு வரும்; கல்வி முறையிலுள்ள குறைபாடுளே காரணம்.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டுக் கல்விக் கூடாகவே தலைமைத்துவத்தை ஏற்றிருந்தனர்.

அவர்கள் கற்பித்த பாடசாலைகளில் மனிதாபிமானம் உள்ளிட்ட விடயங்கள் கற்பித்து கொடுக்கபடவில்லை.

நாட்டில் ஏற்பட்ட ஆயுத போராட்டத்திற்கும் இதுவே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.