ரொரண்டோ மாநகரசபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

936 0

கனடாவின் ரொரண்டோ மாநகரசபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ரொரண்டோ மாநகர சபை சார்பாக மேயர் JohnTory, யாழ்ப்பாண மாவட்டம் சார்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று பிற்பகலில் யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.