இலங்கை அரசியல் கலாசார சீரழிவுக்கு விருப்பு வாக்கு முறையே காரணம் – ஜனாதிபதி

250 0

விருப்பு வாக்கு முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கையின் அரசியல் கலாசாரம் சீரழிவிற்கு உள்ளானதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

விருப்பு வாக்கின் மூலம் கட்சிகள் பலவீனமடைந்து தனிப்பட்ட ஒருவர் முன்னிலையடைந்தார்.

இந்த கலாசாரத்தில் இருந்து நாடு மீள வேண்டும்.

இந்த மாற்றம் அறிவுபூர்வமானதாக அமையவேண்டும்.

அறிவுபூர்வமாக முயற்சிகளின் மூலமே மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இன்று தோற்றமளிக்கும் சமூகமானது, அறிவாற்றலை மையப்படுத்தியதான முயற்சியுடன் ஆரம்பமானதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.