யாழ்ப்பாணம் – மட்டுவில் ஐக்கிய மக்கள் கழகத்தின் எற்பாட்டில் இளைஞர்களை ஒன்றிணைக்கும் மாட்டு வண்டிச்சவாரி நடைபெற்றுள்ளது.
நேற்றையதினம் (03.09.2023) கழகத்தின் இணைப்பாளர் ப.கஜிதரன் தலைமையில் மாட்டு வண்டிச்சவாரி இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட மாட்டுவண்டி சவாரிக்காக 34 மாட்டு வண்டி கழக உறுப்பினர்கள் 155 காளைமாடுகளுடன் பங்குபற்றியிருந்தனர்.
இந்ந சவாரியினை கண்டு களிப்பதற்காக யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



