ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்தறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

244 0

அரசியல் பழிவாங்கல் நிறுத்தப்பட்டு விமல் வீரவன்ச உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாத்தறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாத்தறை பேரூந்து நிலையத்திற்கு முன்னால், இன்று முற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப் படுத்தும், டலஸ் அளகப்பெருமா மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.