எரிபொருள் விலைகள் அதிகரிப்பு !

50 0

எரிபொருள் விலைகள் இன்று வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில் அதன் புதிய விலை 417 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல்  ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய விலை 359 ரூபவாகும்.

மண்ணெண்ணெய்  ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன்  புதிய விலை 231 ரூாவாகும்.

இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் விலை அதிகரிப்பை அடுத்து லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.