தமிழர்களுடன் மத ரீதியாகவும் பேரினவாத அரசு முரண்படுகிறது – மாவை

98 0
தமிழர்கள் மீது இன ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தி வந்த பேரினவாத அரசு இப்போது மத ரீதியான பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிர்வாக தெரிவு  இன்று (30) கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர், இதுவரை காலமும்  தமிழர்கள் மீது இன ரீதியான ஒடுக்கு முறைகளை மேற்கொண்ட பேரினவாத அரசு இப்போது மத ரீதியான வன்முறைகளை  பிரயோகித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

இந்த இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளை நிர்வாகத் தெரிவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுல ராஜா மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாவட்ட கிளை நிர்வாகத்தினர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.