மொறட்டுவ விபத்து – தாயும் மகளும் பலி – சாரதிகள் கைது

327 0

மொறட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதியும், பேருந்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ – ஏகொட உயன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியாகினர்.

பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டமையையடுத்து, பாரவூர்தியானது வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பேருந்து நிறுத்தும் தளத்தில் மோதியுள்ளது.

இதன்போது அங்கிருந்த 3 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் தாயும் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 48 வயதான தாயும் 13 வயதான மகளும் உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.